செங்கை ரேஷன் கடை கட்டடம் பயன்பாட்டிற்கு வராமல் வீண்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு, ஜே.சி.கே., நகரில் கட்டப்பட்ட, ரேஷன் கடை புதிய கட்டடத்தை திறக்காததால் வீணாகி வருகிறது.
செங்கல்பட்டு நகராட்சி, ஜே.சி.கே., நகரில், தனியார் வாடகை கட்டடத்தில், ரேஷன் கடை இயங்கி ருவருகிறது. இங்கு இடவசதி இல்லாததால் நுகர்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால், ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டுமென, கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, புதிய ரேஷன் கடை கட்ட, 2021-22ம் நிதியாண்டில், எம்.எல்.ஏ., தொகுதி நிதியிலிருந்து 7 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த புதிய கட்டடத்தை, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக, பயன்பாட்டிற்கு திறக்காமல் உள்ளனர்.
இதன் காரணமாக தற்போது, இந்த கட்டடம் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது.
பகுதிவாசிகள் நலன் கருதி, ரேஷன் கடை கட்டடத்தை பயன்பாட்டிற்கு திறந்து வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.

மேலும்
-
வேலியே பயிரை மேய்ந்தது: குற்றவாளிகளிடம் பணம், நகை கையாடல் செய்த போலீஸ் எஸ்.ஐ., கைது
-
கேரளாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை: 440 % கூடுதல் என அறிவிப்பு
-
நாடு முழுவதும் மின்னணு போர்க்கருவிகள் சோதனை: ராணுவம் அறிவிப்பு
-
புலி மனிதர் என அழைக்கப்படும் வால்மீக் தாப்பர் காலமானார்
-
அனைத்து துறைகளிலும் பாக்.,கை முந்திய இந்தியா: முப்படை தளபதி
-
முதல்வர் ஸ்டாலினின் ரோடு ஷோ: மதுரையில் துவக்கம்