புதுச்சேரி மதுபாட்டில் கடத்தியவர் கைது
திண்டிவனம்; திண்டிவனத்தில் புதுச்சேரியிலிருந்து மதுபாட்டில் களை கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையில் நேற்று மாலை, திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் உள்ள பஸ் நிலையத்தில் ரோந்தில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, புதுச்சேரியிலிருந்து திண்டிவனத்திற்கு வந்த பஸ்சிலிருந்து பையுடன் இறங்கி வந்தவரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.
இதில் அந்த நபர், புதுச்சேரியிலிருந்து 21 மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது.
இது குறித்து சென்னை, மாதவரம், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த மணிமுத்து, 37; என்பவரை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உலக அழகியாக தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா தேர்வு
-
பைனல் கனவில் மும்பை அணி: பஞ்சாப் அணியுடன் பலப்பரீட்சை
-
பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய மாநிலங்களில் பாதுகாப்பு ஒத்திகை தீவிரம்
-
கருண் நாயர் இரட்டை சதம்: இந்தியா 'ஏ' அணி அசத்தல்
-
டில்லியிடம் வீழ்ந்தது ஜெய்ப்பூர்: அல்டிமேட் டேபிள் டென்னிசில்
-
உலக 'பவர்லிப்டிங்': லலித் 3 'தங்கம்'
Advertisement
Advertisement