நான் நீண்ட நாள் வாழ வேண்டும் என்று சொன்னவர் நடிகர் ராஜேஷ்: ரஜினிகாந்த் புகழாரம்

சென்னை: நான் நீண்ட நாள் வாழ வேண்டும் என்று சொன்னவர் நடிகர் ராஜேஷ் என்று ரஜினிகாந்த் புகழாரம் சூட்டி உள்ளார்.
பிரபல திரைப்பட நடிகர் ராஜேஷ்(75) உடல்நலக்குறைவால் மே 29ம் தேதி காலமானார். அவரின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், தமிழ் திரைப்பட நடிகர்கள் உள்ளிட்ட பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதலும், இரங்கலும் செலுத்தினர்.
இந் நிலையில் ராமாபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டு ராஜேஷ் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த்,நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில் கூறியதாவது;
ராஜேஷ் மிகவும் எளிமையானவர். அவருக்கு நண்பர்கள் நிறைய உள்ளனர். முதல்வர் ஸ்டாலின் முதல் இளையராஜா வரை பலரும் அஞ்சலி செலுத்தினார்கள் என்றால் அவர் எப்படி வாழ்ந்தார் என்பதற்கு சான்றுதான் இது.
அவருக்கு தெரியாத விஷயங்களே கிடையாது. நல்ல மனிதராக வாழ்ந்திருக்கிறார். என்னை அடிக்கடி சந்தித்து, நீங்கள் நீண்ட நாள் வாழ வேண்டும் என்று கூறி அதற்கு என்னென்ன செய்ய வேண்டும், என்ன சாப்பிட வேண்டும் என்று கூறுவார். நல்ல மனிதர். அவரை இழந்தது ஒரு பேரிழப்பு.
இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
மேலும்
-
இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது: பாக்., பிரதமர்
-
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3,500 ஐ தாண்டியது: 2 பேர் உயிரிழப்பு
-
கனமழை மற்றும் நிலச்சரிவால் சிக்கிமில் 1,200 பயணிகள் தவிப்பு: மீட்பு நடவடிக்கையில் தொய்வு
-
ராணுவத்தின் மீது நம்பிக்கை வெளிப்படுத்திய ஒரு திருப்பு முனை தருணம்: கவர்னர் ஆர்.என்.ரவி பெருமிதம்
-
பாகிஸ்தான் ராணுவம் அடங்கி போகாது: அண்ணாமலை பேச்சு
-
தமிழ் செம்மொழியாக இருந்ததா; இல்லை நீங்கள் ஆக்கினீர்களா - தி.மு.க.,வுக்கு சீமான் கேள்வி