அரையிறுதியில் சாத்விக்-சிராக் * உலகின் 'நம்பர்-1' ஜோடியை வீழ்த்தினர்

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சர்வதேச பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி ('நம்பர்-27'), உலகின் 'நம்பர்-1', மலேசியாவின் கோ பெய், நுார் இஜுதீன் ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை 21-17 என கைப்பற்றியது இந்திய ஜோடி.
தொடர்ந்து நடந்த அடுத்த செட்டையும் 21-15 என வசப்படுத்தியது. 39 நிமிடம் மட்டும் நடந்த போட்டியின் முடிவில் இந்திய ஜோடி 21-17, 21-15 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறியது. இதில் இன்று மலேசியாவின் ஆரோன் சியா, ஊய் இக் சோ ஜோடியை எதிர்கொள்கிறது.

Advertisement