அரையிறுதியில் சாத்விக்-சிராக் * உலகின் 'நம்பர்-1' ஜோடியை வீழ்த்தினர்

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சர்வதேச பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி ('நம்பர்-27'), உலகின் 'நம்பர்-1', மலேசியாவின் கோ பெய், நுார் இஜுதீன் ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை 21-17 என கைப்பற்றியது இந்திய ஜோடி.
தொடர்ந்து நடந்த அடுத்த செட்டையும் 21-15 என வசப்படுத்தியது. 39 நிமிடம் மட்டும் நடந்த போட்டியின் முடிவில் இந்திய ஜோடி 21-17, 21-15 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறியது. இதில் இன்று மலேசியாவின் ஆரோன் சியா, ஊய் இக் சோ ஜோடியை எதிர்கொள்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காரில் சென்று திருடியவரிடம் 46 சவரன், 2 கார்கள் பறிமுதல்
-
பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் டேனிஷ்கோட்டை, கவர்னர் மாளிகை
-
புலிக்கு வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கியது
-
அமர்நாத் யாத்திரைக்கு பாதுகாப்பு
-
பணம் கேட்டது யார்? மேயரிடம் கேள்வி எழுப்பும் அ.தி.மு.க., - விவசாயிகள் சங்கம்
-
நீதித்துறை ஊழியர் சங்க நிர்வாகிகள் தேர்வு
Advertisement
Advertisement