அமர்நாத் யாத்திரைக்கு பாதுகாப்பு

ஜம்மு - காஷ்மீரில், கடல் மட்டத்தில் இருந்து 12,755 அடி உயரத்தில் அமைந்துள்ளது அமர்நாத் குகை கோவில். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை,- ஆகஸ்ட் மாதங்களில் இங்கு புனித யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது.
அப்போது மட்டுமே இந்த குகை கோவில் திறந்திருக்கும். இந்த ஆண்டு ஜூலை 3ம் தேதி அமர்நாத் யாத்திரை துவங்குகிறது. பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பின், இந்த யாத்திரைக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
கடந்த 2017ல், இந்த புனித பயணத்தின் போது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஏழு பக்தர்கள் கொல்லப்பட்டனர். தற்போது அதுபோன்ற அசம்பாவிதம் ஏற்படாமல் தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எப்போதும் இல்லாத அளவிற்கு, இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவ வீரர்கள் யாத்திரைக்கு பாதுகாப்பு அளிக்க உள்ளனராம்.
மேலும்
-
ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன்
-
அயோத்தி ராமர் கோவிலுக்கு அழகு சேர்க்கும் தங்க குவிமாடம்
-
சர்வதேச விமான போக்குவரத்து துறையில் இந்தியாவின் பங்கு அபரிமிதம்: பிரதமர் மோடி பெருமிதம்
-
பூவிருந்தவல்லி-பரந்தூர் மெட்ரோ ரயில் சேவை; தமிழக அரசு ஒப்புதல்
-
வரலாறு காணாத மழையில் 4 லட்சம் பேர் சிக்கி தவிப்பு: வெள்ளக்காடானது அசாம்
-
மலேசிய தலைவர்களை சந்தித்த இந்திய குழு