மான் வேட்டையில் மேலும் ஒருவர் கைது

கூடலுார்: கூடலுார் சுரங்கனாறு காப்புக்காடு அருகே பட்டா நிலத்தில் வேட்டையாடிய மானின் உடல், பயன்படுத்தப்பட்ட கத்தி, டூ வீலர் ஆகியவற்றை கம்பம் மேற்கு வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வேட்டையாடியவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

சமீபத்தில் கூடலுாரைச் சேர்ந்த ராஜபிரபுவை கைது செய்து மேலும் இதில் தொடர்புடையவர்களை தேடி வந்தனர்.

மான் வேட்டையில் தொடர்புடைய கூடலுாரைச் சேர்ந்த ராகவன் என்பவரை ரேஞ்சர் ஸ்டாலின் தலைமையிலான வனத்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement