கர்நாடகாவில் 15 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த கும்பல்: 2 பேர் கைது; 4 பேர் ஓட்டம்

பெலகாவி: 15 வயது சிறுமியை இரண்டு முறை கூட்டு பலாத்காரம் செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவான 4 பேரை தேடி வருகின்றனர்.
இது தொடர்பாக போலீசார் கூறியதாவது: பாதிக்கப்பட்ட சிறுமி கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தை சேர்ந்தவர். அவரது நண்பர் ஒருவர், ஆசை வார்த்தை கூறி மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர், 5 நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்தனர். இதனை, அவர்கள் வீடியோவாக பதிவு செய்தனர். தொடர்ந்து, இந்த வீடியோவை ஆன்லைனில் வெளியிடப் போவதாக சிறுமியை மிரட்டி வந்தனர்.
இவ்வாறு மிரட்டி அந்தச்சிறுமியை மீண்டும் 6 பேர் கும்பல் இரண்டாவது முறையாக கூட்டு பலாத்காரம் செய்தனர்.பிறகும் அவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். இதனையடுத்து பயந்து போன அந்தச்சிறுமி போலீசில் புகார் அளித்தார்.இதன் அடிப்படையில் போக்சோ மற்றும் பிஎன்எஸ் ஆகிய சட்டங்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இரண்டு பேரை கைது செய்தனர். இதனையறிந்த நான்கு பேர் தலைமறைவாகினர். அவர்களை தேடி வருவதாக தெரிவித்தனர்.









