ரூ. 2 லட்சம் கோடியை தாண்டிய ஜிஎஸ்டி வசூல்: 16 சதவீதம் அதிகம்

18


புதுடில்லி: கடந்த மே மாதம் ஜிஎஸ்டி மூலம் ரூ.2.01 லட்சம் கோடி வசூல் ஆகி உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்து உள்ளது. இது கடந்த ஆண்டு மே மாதம் வசூல் ஆன தொகையை விட 16.4 சதவீதம் அதிகம் ஆகும்.

இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கடந்த மே மாதத்தில்

மத்திய ஜிஎஸ்டி - ரூ.35,434 கோடி

மாநில ஜிஎஸ்டி- ரூ.43,902 கோடி

ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி - ரூ.1.09 லட்சம் கோடி

செஸ் வரி- ரூ.12,879 கோடி என மொத்தம் ரூ.2.01 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் ஆகி உள்ளது.


மே மாதத்தில்,

உள்நாட்டு பரிமாற்றம் மூலம் கிடைக்கும் வருமானம் 13.7 சதவீதம் அதிகரித்து ரூ.1.50 லட்சம் கோடியும்

இறக்குமதி மூலம் கிடைக்கும் ஜிஎஸ்டி வருமானம் 25.2 சதவீதம் அதிகரித்து ரூ.51,266 கோடியும் வசூல் ஆகி உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


கடந்த ஆண்டு (2024) மே மாதம் ஜிஎஸ்டி மூலம் 1,72,739 கோடி ரூபாய் வசூல் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஜிஎஸ்டி மூலம் ரூ.2.37 லட்சம் கோடி வசூல் ஆகி இருந்தது. தற்போது தொடர்ச்சியாக 2வதாக மே மாதம் ஜிஎஸ்டி வசூல் ரூ.2 லட்சம் கோடியை தாண்டி உள்ளது.

Advertisement