பேரூராட்சி கூட்டம்

வடமதுரை: வடமதுரை பேரூராட்சி கவுன்சில் கூட்டம் தலைவர் நிருபாராணிகணேசன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் பத்மலதா முன்னிலை வகித்தார். கவுன்சிலர் கணேசன் வரவேற்றார்.

பேரூராட்சியின் 5, 8, 9, 11, 13, 15 வது வார்டுகளில் ரூ.3.09 கோடியில் தார் ரோடு, 1,2,7,13 வது வார்டுகளில் ரூ.2.45 லட்சத்தில் குடிநீர் பாதை விஸ்தரிப்பு, தும்மலக்குண்டில் ரூ.45 ஆயிரத்தில் பேவர் பிளாக் அமைத்தல், சீத்தப்பட்டியில் ரூ.6.65 லட்சத்தில் சிறுபாலம் என வளர்ச்சி பணி செய்ய தீர்மானிக்கப்பட்டது. இளநிலை உதவியாளர் முரளிமோகன் நன்றி கூறினார்.

Advertisement