'யு - 15' வாலிபால் போட்டி செயின்ட் பீட்ஸ் அணி முதலிடம்

சென்னை:சாந்தோம், செயின்ட் பீட்ஸ் பள்ளி சார்பில், 'கிளப்' அணிகளுக்கு இடையே 15 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான வாலிபால் போட்டி, நேற்று முன்தினம் நடந்தது.

இப்போட்டியில், ஒய்.எம்.சி.ஏ., - மயிலாப்பூர் பாய்ஸ், கண்ணகி நகர், செயின்ட் பீட்ஸ், மெரினா பீச் பாய்ஸ், மான்போர்ட் உள்ளிட்ட 14 அணிகள் பங்கேற்றன. அணிகள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு, போட்டியில் விளையாடின.

இதில், முதல் அரையிறுதியில் குருநானக் கல்வி சங்கம் அணி, 25 - 14, 25 - 22 என்ற புள்ளிக்கணக்கில், கண்ணகி நகர் அணியை வீழ்த்தியது.

மற்றொரு அரையிறுதியில், செயின்ட் பீட்ஸ் அணி, 25 - 18, 25 - 17 என்ற புள்ளிக்கணக்கில், யுனைடெட் வாலிபால் கிளப் அணியை தோற்கடித்து, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், செயின்ட் பீட்ஸ் மற்றும் குருநானக் கல்வி சங்கம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில், 25 - 20, 22 - 25, 25 - 22 என்ற புள்ளிக்கணக்கில், செயின்ட் பீட்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்று, முதலிடத்தை பிடித்தது.

Advertisement