'யு - 15' வாலிபால் போட்டி செயின்ட் பீட்ஸ் அணி முதலிடம்

சென்னை:சாந்தோம், செயின்ட் பீட்ஸ் பள்ளி சார்பில், 'கிளப்' அணிகளுக்கு இடையே 15 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான வாலிபால் போட்டி, நேற்று முன்தினம் நடந்தது.
இப்போட்டியில், ஒய்.எம்.சி.ஏ., - மயிலாப்பூர் பாய்ஸ், கண்ணகி நகர், செயின்ட் பீட்ஸ், மெரினா பீச் பாய்ஸ், மான்போர்ட் உள்ளிட்ட 14 அணிகள் பங்கேற்றன. அணிகள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு, போட்டியில் விளையாடின.
இதில், முதல் அரையிறுதியில் குருநானக் கல்வி சங்கம் அணி, 25 - 14, 25 - 22 என்ற புள்ளிக்கணக்கில், கண்ணகி நகர் அணியை வீழ்த்தியது.
மற்றொரு அரையிறுதியில், செயின்ட் பீட்ஸ் அணி, 25 - 18, 25 - 17 என்ற புள்ளிக்கணக்கில், யுனைடெட் வாலிபால் கிளப் அணியை தோற்கடித்து, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், செயின்ட் பீட்ஸ் மற்றும் குருநானக் கல்வி சங்கம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில், 25 - 20, 22 - 25, 25 - 22 என்ற புள்ளிக்கணக்கில், செயின்ட் பீட்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்று, முதலிடத்தை பிடித்தது.
மேலும்
-
ரூ. 2 லட்சம் கோடியை தாண்டிய ஜிஎஸ்டி வசூல்: 16 சதவீதம் அதிகம்
-
எரிந்த நிலையில் போலீஸ் அதிகாரி உடல்: ஒடிசா தேசிய நெடுஞ்சாலையில் அதிர்ச்சி
-
ஓட்டு வங்கிக்காக வக்ப் சட்டத்திற்கு எதிர்ப்பு; மம்தா மீது அமித் ஷா குற்றச்சாட்டு
-
கால்பந்து போட்டி வெற்றி கொண்டாட்டத்தில் வன்முறை: பிரான்சில் இருவர் பலி; 500 பேர் கைது
-
கர்நாடகாவில் 15 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த கும்பல்: 2 பேர் கைது; 4 பேர் ஓட்டம்
-
பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசு முற்றிலும் தோல்வி:பா.ஜ., தலைவர் தருண் சுக் குற்றச்சாட்டு