சுற்றுச்சூழலை காக்க விழிப்புணர்வு பேரணி

கும்மிடிப்பூண்டி:உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, கும்மிடிப்பூண்டி பேரூராட்சி துாய்மை பணியாளர்கள் சார்பில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. இதில், அலுவலக துாய்மை பணியாளர்கள், கவுன்சிலர்கள் உட்பட, 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

பேரணியை, பேரூராட்சி தலைவர் ஷகிலா துவக்கி வைத்தார். பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து துவங்கிய பேரணி, ரெட்டம்பேடு சாலை, ஜி.என்.டி., சாலை வழியாக பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.

இதில், ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பெருட்களை தவிர்ப்பது, சுகாதாரமான சூழல் உருவாக்குவது, மரம் வளர்ப்பது உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய தட்டிகளை ஏந்திக்கொண்டு, கோஷமிட்டபடி சென்றனர்.

Advertisement