அயிற்றுார் சிவன் கோவிலில் சலங்கை பூஜை நிகழ்ச்சி

அரியாங்குப்பம் : புதுச்சேரி சுந்தரா நாட்டிய கேந்ரா சார்பில், தவளக்குப்பம் அயிற்றுார் சிவன் கோவிலில், நேற்று இரவு சலங்கை பூஜை நிகழ்ச்சி நடந்தது.

மாணவிகள் கலந்து கொண்டு, அரங்கேற்றம் செய்தனர். சிறப்பு விருந்தினராக முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியை அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் பார்வையிட்டனர். கோஜிரீயோ கராத்தே சங்க செயலாளர் சுந்தர்ராஜன், சுந்தரமூர்த்தி, சரவணன் கலந்துகொண்டனர்.

Advertisement