தமிழ் செம்மொழியாக இருந்ததா; இல்லை நீங்கள் ஆக்கினீர்களா - தி.மு.க.,வுக்கு சீமான் கேள்வி

சென்னை: '' தமிழ் மொழி செம்மொழியாக இருந்ததா? நீங்கள் செம்மொழி ஆக்கினீர்களா?'', என நாம் தமிழர் கட்சியின் சீமான் கூறினார்.
சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: நான் யாருடனும் கூட்டு சேரவில்லை. சாப்பாட்டில் மட்டும் தான் கூட்டு பொரியல். சண்டை என்றால் தனித்து தான் போட்டியிடுவேன்.
கருணாநிதிக்கும் செம்மொழிக்கும் என்ன சம்பந்தம். நீங்கள் கொண்டாடினால்...
நான் முதல்வர் ஆகிவிடுவேன். நீங்கள் கொண்டாடுவீர்களா... திண்டாடுவீர்களா... தமிழ் மொழி செம்மொழியாக இருந்ததா? நீங்கள் செம்மொழி ஆக்கினீர்களா?
மத்தியில் காங்., ஆட்சியில் இருந்த போது செம்மொழி என அறிவித்ததால், செம்மொழி ஆனதா? தமிழ் செம்மொழி என அனைவரும் கூறுகின்றனர். நீங்கள் யார் தமிழ் மொழிக்கு அங்கீகாரம் பெற்றுத்தர
வர்த்தகர்கள் மாநாட்டில், தமிழில் பெயர் எழுத சொல்லிவிட்டு ஆங்கில பெயரை அப்படியே தமிழில் எழுத சொல்கிறார் முதல்வர். அனைத்து கடைகளிலும் எழுத்து தமிழ் ஆக இருக்கும். உச்சரிப்பு ஆங்கிலம் ஆக இருக்கும். எழுத்து ஆங்கிலம் ஆக இருக்கும். உச்சரிப்பு தமிழ் ஆக இருக்கும். தமிழ்நாடு என பெயர் வைத்து மயங்க வைத்து மொத்தமாக முடித்துவிட்டீர்கள்.
கருணாநிதி பிறந்த நாளை செம்மொழி நாள் என முதல்வர் அறிவித்தால், கட்சிக்காரர்கள் ஏற்பார்கள். மக்கள் ஏற்க மாட்டார்கள். மொழிக்காக உயிர்நீத்தவர் தாளமுத்து நடராஜன். தாளமுத்து நடராஜன் இறந்த நாளை செம்மொழி நாளாக வைக்க வேண்டும். அது தான் நடக்கும். நீங்கள் ஆசைக்கு அறிவிக்க வேண்டியதுதான். இவ்வாறு அவர் கூறினார்.











மேலும்
-
மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் மசோதா; கவர்னர் ரவி ஒப்புதல்!
-
சிவகங்கையில் ஆடு திருட வந்ததாக கூறி சகோதரர்கள் அடித்துக்கொலை; கிராம மக்களிடம் போலீஸ் விசாரணை
-
வக்ப் சொத்துக்களை பதிவு செய்ய இணையதளம்: ஜூன் 6ல் தொடங்க மத்திய அரசு முடிவு
-
தமிழகத்தில் ஒரே நாளில் 8 பேர் கொலை!
-
புதிய டிரான்ஸ்பார்மர் பழுதாகாமல் இருக்க ஸ்பெஷல் பூஜை; வேற லெவலில் சிந்தித்த மக்கள்
-
கருத்துக் கணிப்பு என்ற பெயரில் பொய்யை விதைக்க முயற்சி; விஜய்க்கு ஆதரவான சர்வே பற்றி முதல்வர் விமர்சனம்