குட்கா பறிமுதல் இரு பெண்கள் சிக்கினர்

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி, விவேகானந்தா நகரில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார், அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அங்குள்ள மளிகை கடை மற்றும் பெட்டி கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்த, 3,019 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். அதன் உரிமையாளர்களான தாட்சாயிணி, 42, மைமூன், 55, ஆகிய இரு பெண்களை கைது செய்தனர். கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement