லாட்டரி சீட்டு விற்றவர் கைது

திருபுவனை,: திருபுவனை அருகே 3ம் நம்பர் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
திருபுவனை அடுத்த கே.ஆண்டியார்பாளையம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட 3ம் நம்பர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இது குறித்து திருபுனை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் கே.ஆண்டியார்பாளையம் பகுதியில் ஆய்வு செய்தனர்.
அங்கு லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த நபர் போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயன்றார். அவரை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.
அவர் ஆண்டியார்பாளையத்தை சேர்ந்த ராஜி (எ) பெரியண்ணசாமி 35; என்பது தெரியவந்தது. அவரை போலீசார், கைது செய்து, அவரிடம் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான கேரளா உள்ளிட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள், இரண்டு மொபைல் போன்கள் மற்றும் 7 ஆயிரத்து 549 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும், விசாரணையில், லாட்டரி வியாபாரியான, ஆண்டியார்பாளையத்தை சேர்ந்த குமார் என்பவர் மூலம் லாட்டரி சீட்டுகள் வாங்கி விற்பனை செய்தது தெரியவந்தது.
பெரியண்ணசாமியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
தலைமறைவான வியாபாரி குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும்
-
இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது: பாக்., பிரதமர்
-
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3,500 ஐ தாண்டியது: 2 பேர் உயிரிழப்பு
-
கனமழை மற்றும் நிலச்சரிவால் சிக்கிமில் 1,200 பயணிகள் தவிப்பு: மீட்பு நடவடிக்கையில் தொய்வு
-
ராணுவத்தின் மீது நம்பிக்கை வெளிப்படுத்திய ஒரு திருப்பு முனை தருணம்: கவர்னர் ஆர்.என்.ரவி பெருமிதம்
-
பாகிஸ்தான் ராணுவம் அடங்கி போகாது: அண்ணாமலை பேச்சு
-
தமிழ் செம்மொழியாக இருந்ததா; இல்லை நீங்கள் ஆக்கினீர்களா - தி.மு.க.,வுக்கு சீமான் கேள்வி