மகிஷாசுரமர்த்தினி அம்மனுக்கு 62 கிலோ வெள்ளியில் கவசம்

திருத்தணி,:திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில் மத்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர்.
இக்கோவிலில் பூஜை செய்து வழிபட்டால் திருமண தடை நீங்குதல், காரிய சித்தி, பகை விலகுதல் போன்ற நன்மைகள் ஏற்படும் என்பது ஐதீகம். கடந்த சில ஆண்டுகளாகவே, மத்தூர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நேற்று மகிஷாசுரமர்த்தினி அம்மனுக்கு, உபயதாரர்கள் வாயிலாக வழங்கிய 62 கிலோ வெள்ளியால் ஆன கவசத்தை, அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் மனைவி சாந்தி, முருகன் கோவில் இணை ஆணையர் ரமணி, அறங்காவலர் சுரேஷ்பாபு, உபயதாரர் பாமாசந்திரன் ஆகியோர் முன்னிலையில் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது: பாக்., பிரதமர்
-
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3,500 ஐ தாண்டியது: 2 பேர் உயிரிழப்பு
-
கனமழை மற்றும் நிலச்சரிவால் சிக்கிமில் 1,200 பயணிகள் தவிப்பு: மீட்பு நடவடிக்கையில் தொய்வு
-
ராணுவத்தின் மீது நம்பிக்கை வெளிப்படுத்திய ஒரு திருப்பு முனை தருணம்: கவர்னர் ஆர்.என்.ரவி பெருமிதம்
-
பாகிஸ்தான் ராணுவம் அடங்கி போகாது: அண்ணாமலை பேச்சு
-
தமிழ் செம்மொழியாக இருந்ததா; இல்லை நீங்கள் ஆக்கினீர்களா - தி.மு.க.,வுக்கு சீமான் கேள்வி
Advertisement
Advertisement