இடி தாங்கும் பலசாலி 'எர்த்திங்'; கட்டடத்தை காக்கும் கவசம்

மேகங்கள் உராய்வதால் ஏற்படும் வெப்பம் காரணமாக, வானத்தில் மின்சாரம் உண்டாகி பூமியில் பாயும்போது இடி, மின்னல் உண்டாகிறது.
இடி, மின்னல் காரணமாக உருவாகும் மின்சாரம், பூமியை நோக்கி வரும்போது உயரமான கட்டடங்கள், உயரமான மரங்கள் போன்றவற்றின் மீது பாய்வதால், சேதமும் ஏற்படுகிறது.
உயரமான கட்டடங்களின் உச்சியில், கூர் முனை உள்ள ஒரு தடித்த கம்பி பொருத்தப்படுகிறது. அந்த கம்பி பூமி வரை இழுக்கப்பட்டு, பூமியினுள் புதைக்கப்படுகிறது; இதற்கு 'எர்த்திங்' என்று பெயர். இவ்வாறு செய்வதன் மூலம் கட்டடம், பாதிப்பில் இருந்து காப்பாற்றப்படுகிறது.
மின்சார கட்டமைப்பில், 'எர்த்திங்' மிக முக்கியமானது. இதனால், மின் கசிவிலிருந்தும், இடி மின்னல்களில் இருந்தும், மனித உயிர்களையும், மின் உபகரணங்களையும் பாதுகாக்கலாம்.
எர்த்திங் மூன்று வகை உண்டு. மின் திறன் அதிகரிக்க வைக்கும் நியூட்ரல் எர்த்திங், உபகரணங்களில் இருந்து மின் கசிவு பாதுகாப்பிற்கான எக்யூப்மென்ட் எர்த்திங் மற்றும் இடி மின்னலில் இருந்து பாதுகாக்கும் இடிதாங்கி எர்த்திங் ஆகிய மூன்றே அவை.
இவற்றை, நமது தேவைக்கேற்ப ஜி.ஐ.,ராடுகள், காப்பர் ராடுகள், பாண்டெட் காப்பர் ராடுகள் கொண்டு அமைக்கலாம். எர்த் குழியில் கெமிக்கலுக்கு பதிலாக, 'ரெடிமேட் பேக் பில்லிங் பவுடர்' உபயோகித்தால், மண்ணுக்கு நல்லது என்கின்றனர் பொறியாளர்கள்.
மேலும்
-
இ.பி.எஸ்., அண்ணாமலை குறித்து ஒருமையில் பேச்சு; வருத்தம் தெரிவித்தார் ஆதவ் அர்ஜூனா
-
2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை ஒன்றிணைந்து எதிர் கொள்ள வேண்டும்; முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
அ.தி.மு.க., அறிவிப்பால் பிரேமலதா அப்செட்; கூட்டணி குறித்து ஜனவரியில் முடிவு
-
பா.ம.க.,வில் இருந்து அன்புமணி நீக்கமா? ராமதாஸ் கொடுத்த பேட்டி
-
ராஜ்யசபா தேர்தல்: அ.தி.மு.க., சார்பில் இன்பதுரை, தனபால் போட்டி
-
தொகுதி மறு வரையறை கூடாது; மாநில சுயாட்சி, மாநிலப் பட்டியலில் கல்வி வலியுறுத்தி தி.மு.க., பொதுக்குழு தீர்மானம்