பொங்கல் திருவிழா

மேலுார்: வடக்கு வலையபட்டியில் வீரகாளியம்மன், அனைத்து கிராம தெய்வங்களுக்கும் கிராமத்து சார்பில் பொங்கல் வைக்கப்பட்டது.

இதை முன்னிட்டு நல்லி கோவில்பட்டி அய்யனார் கோயிலில் உள்ள கண்மாயில் இருந்து தீர்த்தம் கொண்டு வந்து கிராமத்து சார்பில் வீரகாளியம்மன் கோயில் முன்பு பொங்கல் வைக்கப்பட்டது.

பிறகு சுவாமிக்கு படையலிட்ட பிறகு பொங்கலை ஊர்வலமாக கொண்டு சென்று கண்மாயில் கரைத்தனர். மழை பெய்து விவசாயம் செழிக்க பொங்கல் திருவிழா கொண்டாடியதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

Advertisement