ஜூன் 11 முதல் நடை பயணம் வெங்கடேசன் எம்.பி., அறிவிப்பு

மதுரை: மார்க்சிஸ்ட் கட்சி சு.வெங்கடேசன் எம்.பி., கூறியதாவது: மத்திய நிதியமைச்சர் நிர்மலாவை சந்தித்து நகைக்கடன் தொடர்பான ரிசர்வ் வங்கி வரைவுகளை திரும்பப்பெற கோரிக்கை வைத்தோம். அதன் பலனாக நகைக்கடன் திருத்த விதிகள் அறிவிப்பை நிதி அமைச்சகம் நிறுத்தி உள்ளது. மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய தொல்லியல் அமைச்சகம் திருத்தம் செய்து கேட்கிறது. சான்றுகள்படி சமர்பிக்கப்பட்ட உண்மையை மத்திய அரசால் ஏற்க முடியவில்லை. தமிழ்நாட்டின் வரலாற்று உண்மைகளை திருத்துவதற்கான முயற்சி என்றால் அதை கண்டிக்கிறோம்.

மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக, மக்கள் தேவைகள், பிரச்னைகள், வளர்ச்சியை மையப்படுத்தி மார்க்சிஸ்ட் சார்பில் தமிழகம் முழுவதும் ஜூன் 11 முதல் 21 வரை நடை பயணம் மேற்கொள்ள உள்ளோம். ஒவ்வொரு பகுதியிலும் அந்த பகுதி கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்வர் என்றார்.

Advertisement