காரில் சென்று 40க்கும் மேற்பட்ட வீடுகளில் திருட்டு; பலே கில்லாடி கைது

விருதுநகர்: காரிலேயே சென்று 40 க்கும் மேற்பட்ட வீடுகளில் திருட்டில் ஈடுபட்ட பலே கில்லாடியை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் சூலக்கரை இபி காலனியைச் சேர்ந்தவர் பாலு மகன் பொன்ராஜ் 44. இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது.
காரைக்குடி மற்றும் குன்றக்குடி பகுதிகளில் பூட்டி இருந்த வீட்டை உடைத்து தொடர் திருட்டு நடந்து வந்தது. சிசிடிவி கேமரா அடிப்படையில் போலீசார் குற்றவாளியை தேடி வந்தனர்.
இந்நிலையில் முக்கிய சாலை மற்றும் கேமரா உள்ள சாலைகளை பயன்படுத்தாமல் குறுகிய தெருச் சாலையை பயன்படுத்தி கார் ஒன்று சென்று வந்தது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் காரை பின் தொடர்ந்து பொன்ராஜை போலீசார் பிடித்தனர்.
விசாரணையில் அவர் 40க்கும் மேற்பட்ட வீடுகளை உடைத்து திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரிடமிருந்து தங்கள் நகைகள், பணம், திருட்டுக்கு பயன்படுத்திய கார், திருட்டு பணத்தில் வாங்கிய கார் என மூன்று கார்களை பறிமுதல் செய்துள்ளனர்.



மேலும்
-
நலத்திட்ட உதவி வழங்கும் விழா
-
3 அரசு கல்லுாரிகளில் 25,148 விண்ணப்பங்கள் குவிந்தன: மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட 4,074 அதிகரிப்பு
-
கடன் தகராறில் பெண்ணை கடத்திய மூதாட்டி கைது
-
நெல்லையப்பர் கோயில் தேருக்கு 200 கிலோ வெள்ளி வழங்கல்
-
திசைமாறும் எண்ணத்தில் தே.மு.தி.க., ராஜ்யசபா 'சீட்' மறுப்பால் பிரேமலதா கடுகடுப்பு
-
மாவட்டத்தில் 'சமக்ர ஷிக்சா' திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதி குறைகிறது:கல்வி திட்ட பணி எண்ணிக்கையும் ஆண்டுதோறும் சரிவு