கடன் தகராறில் பெண்ணை கடத்திய மூதாட்டி கைது
தேனி:தேனிமாவட்டம் உத்தமபாளையம் வெள்ளையம்மாள்புரத்தில் கடனை திருப்பி தராத சமுத்திரம் என்பவரை, காரில் கடத்திய பக்கத்து வீட்டை சேர்ந்த மூதாட்டி பொன்னுத்தாயை 70, போலீசார் கைது செய்தனர்.
தேனி வெள்ளையம்மாள்புரம் பாடசாலை தெரு சமுத்திரம் 50 . இவர் வீடு கட்டுவதற்காக பலரிடம் கடன் வாங்கி இருந்தார். பக்கத்து வீட்டில் வசிக்கும் பொன்னுத்தாயிடம் சில லட்சம் கடன் வாங்கினார். அதனை திருப்பித் தராததால் இருவருக்கும் முன் விரோதம் ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் சமுத்திரம் வீட்டில் தண்ணீர் கேட்பது போல் பொன்னுத்தாய், மேலும் 3 பேர் வந்தனர். அவர்கள் திடீரென சமுத்திரத்தை காரில் கடத்திச் சென்றனர். ஓடைப்பட்டி இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் தலைமையிலான போலீசார் புள்ளிமான் கோம்பை அருகே சமுத்திரத்தை மீட்டனர். பொன்னுத்தாயை கைது செய்தனர். இவர் மீது கஞ்சா விற்பனை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும்
-
ராணுவ வீரர்கள், குடும்பத்தினர் பேட்டி, செய்தி வெளியிடுவதை தவிருங்கள்; ஊடகத்தினருக்கு ராணுவம் வேண்டுகோள்
-
மாவட்ட செயலாளர் - வட்டச் செயலாளர் பேசியது குற்றமா: அண்ணாமலைக்கு அமைச்சர் மா.சு., பதில்
-
மின்தடையால் பாதிப்பு இல்லை: 'நீட்' மறுதேர்வு நடத்த மத்திய அரசு மறுப்பு
-
கால்வாய் அடைப்பு பிரச்னை: தமிழக மாசு கட்டுப்பாடு அமைப்புக்கு நோட்டீஸ்
-
நல்ல அரசியல் தலைவருக்கு அழகு; செல்வப்பெருந்தகைக்கு அண்ணாமலை பதிலடி
-
கனரா வங்கியில் 59 கிலோ தங்கம் கொள்ளை: கர்நாடகாவில் துணிகர சம்பவம்