தவறான கருத்துக்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு
கள்ளிமந்தையம்:தவறான கருத்துக்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒரு சமுதாயத்தினர் முன்னாள் ஊராட்சி தலைவர் கணேசன் தலைமையில் கள்ளிமந்தையம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் மனு அளித்தனர்.
மனுவில் தெரிவித்துள்ளதாவது: கள்ளிமந்தையம் ஊராட்சியில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் அருந்ததியர் உட்பட 18 சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம்.
சில நாட்களாக சில அமைப்புகளை சேர்ந்தவர்கள் அருந்ததிய சமுதாய மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளம், சுவரொட்டிகள் மூலம் தவறான கருத்துகளை பரப்பி வருகின்றனர்.
இவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது.
கலெக்டர், பழநி ஆர்.டி.ஓ., க்கும் இம்மனுவை அனுப்பி உள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிக்கிம் ராணுவ முகாம் அருகே நிலச்சரிவு: வீரர்கள் 3 பேர் பலி; 6 பேர் மாயம்
-
தமிழகத்தில் ஜூன் 8ம் தேதி வரை மிதமான மழை தொடரும்; வானிலை மையம் எச்சரிக்கை
-
உதயநிதிக்கு உடல் நலக்குறைவு
-
சிறை தண்டனையை விட பெரும் கொடுந்தண்டனை; காவலர்களுக்காக குரல் கொடுத்த சீமான்
-
டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு
-
2026ல் தி.மு.க., மகத்தான வெற்றி பெற்று ஆட்சியை தொடரும்; முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
Advertisement
Advertisement