முன்விரோதத்தில் 3 பேருக்கு வெட்டு
புதுச்சேரி: புதுச்சேரி, சொக்கநாதன் பேட்டை, விநாயகர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பழனி. இவரது மகன் எலி (எ) தினகர், 20; மெக்கானிக். நேற்று இரவு 9:00 மணிக்கு தினகர் வீட்டிற்கு வந்த இளைஞர்கள் சிலர், அவரை அழைத்து சென்றனர். அவர்கள் வழுதாவூர் சாலையில் நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்களிடையே திடீர் மோதல் வெடித்தது. இதில், அவர்களுக்குள் கத்தியால் வெட்டிக் கொண்டனர்.
இதில், தினகருக்கு தலையில் வெட்டு விழுந்தது. மேலும், லாஸ்பேட்டை ஜேக்கப், 23, பாரதிபுரம் ஏழுமலை, 25, ஆகியோருக் கும் கத்தி வெட்டு விழுந்து படுகாயமடைந்தனர். படுகாயம் அடைந்த 3 பேரும் கதிர்காமம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தினகர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தன்வந்தரி நகர் போலீசார் வழக்குப் பதிந்து மோத லுக்கான காரணம் குறித்து விசாரித்தனர். முதல்கட்டமாக முன்விரோதத்தில் தகராறு ஏற்பட்டு, வெட்டிக் கொண்டது தெரிய வந்தது.
மேலும்
-
தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம்
-
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர்: இந்திய வீரர்களுக்கு பிரதமர் பாராட்டு
-
இன்று ஒரே நாளில் இரு முறை விலை உயர்வு: சவரன் ரூ.72000 தாண்டியது ஆபரணத் தங்கம்
-
தக் லைப் Vs கன்னட மொழி: கர்நாடகா ஐகோர்ட் படியேறிய கமல்
-
43 ஆண்டு நீதிப்போராட்டம்: சிறையிலிருந்து 104 வயது முதியவர் விடுவிப்பு
-
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 16 பேர் சரண்; கெர்லபெண்டா நக்சல்கள் இல்லாத கிராமமாக மாறியது!