விருத்தாசலத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

விருத்தாசலம்: விருத்தாசலம் தினசரி காய்கறி மார்க்கெட் கட்டும் பணிக்காக, தற்காலிக கடைகள் அகற்றும் பணி நடந்தது.
விருத்தாசலம்-காட்டுக்கூடலுார் சாலையில் தினசரி காய்கறி மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு 90 காய்கறி கடைகள் இயங்கின. இந்நிலையில், இப்பகுதியில் 5.41 கோடி ரூபாய் மதிப்பில் ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட் கட்டும் பணி நடக்கிறது.
இதில், 94 கடைகள் கட்டப்படுகிறது. முதற்கட்டமாக ஒரு பகுதியில் 40 கடைகள் கட்டப்பட்டு 80 சதவீதம் பணி முடிவடைந்த நிலையில் உள்ளது. இங்கு, வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை நடத்தி வந்ததால் கட்டுமான பணி பாதித்தது.
இதன் காரணமாக, நகராட்சி நிர்வாகம், தற்காலிக கடைகளை அகற்ற கோரி, நோட்டீஸ் வழங்கியது. ஆனால், வியாபாரிகள் கடைகளை அகற்றாததால், நகராட்சி கமிஷனர் பானுமதி தலைமையிலான அதிகாரிகள் நேற்று ஜே.சி.பி., இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையில், நகராட்சி அதிகாரிகள் காய்கறி வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, டெண்டர் விடப்பட்டு, கடைகள் விடப்படும் உறுதியளித்தனர். இதையடுத்து வியாபாரிகள் கலைந்து சென்றனர்.
மேலும்
-
தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம்
-
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர்: இந்திய வீரர்களுக்கு பிரதமர் பாராட்டு
-
இன்று ஒரே நாளில் இரு முறை விலை உயர்வு: சவரன் ரூ.72000 தாண்டியது ஆபரணத் தங்கம்
-
தக் லைப் Vs கன்னட மொழி: கர்நாடகா ஐகோர்ட் படியேறிய கமல்
-
43 ஆண்டு நீதிப்போராட்டம்: சிறையிலிருந்து 104 வயது முதியவர் விடுவிப்பு
-
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 16 பேர் சரண்; கெர்லபெண்டா நக்சல்கள் இல்லாத கிராமமாக மாறியது!