பெண் தற்கொலை

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த கீழக்குப்பத்தைச் சேர்ந்தவர் மணிசங்கர், இவரது மனைவி புனிதவள்ளி, 29; திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது.

2 பெண் குழந்தைகள் உள்ளனர். புனிதவள்ளி வீட்டில் இருந்தபடி சென்னையில் உள்ள ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் திடீரென அவர், துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில், முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும், திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் வரதட்சணை காரணமாக இறந்தாரா என்பது குறித்து ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பரிந்துரை செய்தனர்.

Advertisement