கோவிலுக்கு கோபுர கலசம்: ஐகோர்ட் நீதிபதி வழங்கல்

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை கெங்கை அம்மன் கோவிலுக்கு சென்னை ஐகோர்ட் நீதிபதி கோபுர கலசம் வழங்கினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை, கைலாசநாதர் கோவில் குளக்கரையில் அமைந்துள்ள கெங்கை அம்மன் கோவிலில் வரும் 6ம் தேதி கும்பாபிேஷகம் நடக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், கோவிலுக்கு சென்னை ஐகோர்ட் நீதிபதி தண்டபாணி அவரது குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு வந்தார். அப்போது கோவில் நிர்வாகிகள் மணிகண்டன், ராமதாஸ், பொன்னுசாமி, குமார், வழக்கறிஞர் வெங்கடேசன், முருகன், தண்டபாணி உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர்.
இதையடுத்து நீதிபதி தண்டபாணி, சுவாமி தரிசனம் செய்து, கோவில் கோபுரத்திற்கான கலசத்தை நிர்வாகிகளிடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் டி.எஸ்.பி., அசோகன், இன்ஸ்பெக்டர் ஷாகுல் ஹமீது மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.
மேலும்
-
தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம்
-
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர்: இந்திய வீரர்களுக்கு பிரதமர் பாராட்டு
-
இன்று ஒரே நாளில் இரு முறை விலை உயர்வு: சவரன் ரூ.72000 தாண்டியது ஆபரணத் தங்கம்
-
தக் லைப் Vs கன்னட மொழி: கர்நாடகா ஐகோர்ட் படியேறிய கமல்
-
43 ஆண்டு நீதிப்போராட்டம்: சிறையிலிருந்து 104 வயது முதியவர் விடுவிப்பு
-
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 16 பேர் சரண்; கெர்லபெண்டா நக்சல்கள் இல்லாத கிராமமாக மாறியது!