கோட்டக்குப்பத்தில் த.மு.மு.க., ஆர்ப்பாட்டம்

கோட்டக்குப்பம்:பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்தி வரும் மனித இன அழிப்பு பயங்கரவாரதத்தை கண்டித்து, கோட்டக்குப்பத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

காயிதே மில்லத் வளைவு சந்திப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, நகர தலைவர் அபுதாஹிர் தலைமை தாங்கினார். தலைமைக் கழக பேச்சாளர் கோவை செய்யது, மாநிலச் செயலாளர் முஸ்தான் தீன், மாவட்ட தலைவர் அஸ்கர் அலி ஆகியோர் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்தி வரும் மனித இன அழிப்பு பயங்கரவாரதத்தை கண்டித்து பேசினர்.த.மு.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.

முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் அஷ்ரப் அலி நன்றி கூறினார்.

Advertisement