வீடு புகுந்து 11 சவரன் கொள்ளை புதுச்சத்திரம் அருகே துணிகரம்

புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அருகே வீடு புகுந்து 11 சவரன் நகைகள் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலுார் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த அய்யம்பேட்டையை சேர்ந்தவர் வீரப்பன் மனைவி வள்ளி, 70 ; இவர் கடந்த 25ம் தேதி அருகில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று விட்டு சிறிது நேரத்தில் வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்தை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 11 சவரன் நகைளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.

இதுகுறித்து வள்ளி அளித்த புகாரின் பேரில், புதுச்சத்திரம் போலீசார் நேற்று வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Advertisement