வீடு புகுந்து 11 சவரன் கொள்ளை புதுச்சத்திரம் அருகே துணிகரம்
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அருகே வீடு புகுந்து 11 சவரன் நகைகள் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலுார் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த அய்யம்பேட்டையை சேர்ந்தவர் வீரப்பன் மனைவி வள்ளி, 70 ; இவர் கடந்த 25ம் தேதி அருகில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று விட்டு சிறிது நேரத்தில் வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்தை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 11 சவரன் நகைளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.
இதுகுறித்து வள்ளி அளித்த புகாரின் பேரில், புதுச்சத்திரம் போலீசார் நேற்று வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வரலாறு காணாத மழையில் 4 லட்சம் பேர் சிக்கி தவிப்பு: வெள்ளக்காடானது அசாம்
-
மலேசிய தலைவர்களை சந்தித்த இந்திய குழு
-
தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம்
-
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர்: இந்திய வீரர்களுக்கு பிரதமர் பாராட்டு
-
இன்று ஒரே நாளில் இரு முறை விலை உயர்வு: சவரன் ரூ.72000 தாண்டியது ஆபரணத் தங்கம்
-
தக் லைப் Vs கன்னட மொழி: கர்நாடகா ஐகோர்ட் படியேறிய கமல்
Advertisement
Advertisement