நைஜீரியாவில் பஸ் கவிழ்ந்து விபத்து; விளையாட்டு வீரர்கள் 21 பேர் பரிதாப பலி

அபுஜா: நைஜீரியாவில் சாலையில் சென்று கொண்டிருந்த பஸ் கட்டுப்பாட்டை இழந்து, கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் விளையாட்டு வீரர்கள் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நைஜீரியாவின் ஓகுன் மாகாணத்தில் தேசிய விளையாட்டு விழா நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற தடகள வீரர்கள் ஒரு பஸ்சில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது தேசிய நெடுஞ்சாலையில் பஸ் சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர். இந்த விபத்தில் தடகள வீரர்கள் 21 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்திற்கான காரணம் குறித்து பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். அதிவேகமாக பஸ்ஸை இயக்கியது தான் விபத்திற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
"நைஜீரியாவில் சாலைகளின் நிலைமை மோசமாக இருக்கிறது. போக்குவரத்து விதிகளை மீறி டிரைவர்கள் செயல்படுவதால் அதிகமான விபத்துக்கள் நிகழ்கிறது" என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் நைஜீரியாவில் 9,570 சாலை விபத்துக்களினால் 5,421 பேர் உயிரிழந்துள்ளனர் என புள்ளி விவரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.



மேலும்
-
கழுகு மோதி விமானம் சேதம் 175 பயணியர் உயிர் தப்பினர்
-
'தக் லைப்' படம் திரையிட அனுமதி கோரி வழக்கு! கர்நாடக ஐகோர்ட்டில் நடிகர் கமல் மனு
-
விராட் கோலி பார் மீது வழக்கு
-
அடுத்தடுத்து யானைகள் இறப்பது ஏன்? விசாரணைக்கு வனத்துறை உத்தரவு
-
5 மாதங்களில் டெங்குவால் 7,500 பேர் பாதிப்பு
-
அரசு மருத்துவமனைகள் மீது 'வாட்ஸாப்'பில் புகாரளிக்கலாம்