மனிதநேயத்திற்கு எதிரான குற்றம்: ஷேக் ஹசீனா மீது வங்கதேச அரசு குற்றச்சாட்டு

டாகா: மாணவர்கள் போராட்டத்தின் போது அதனை ஒடுக்குவதற்காக, பிரதமர் ஆக இருந்த ஷேக் ஹசீனா மனிதநேயத்திற்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்டார் என வங்கதேச அரசு குற்றம்சாட்டி உள்ளது.
வங்கதேசத்தில், கடந்த 2024ம் ஆண்டு மாணவர்கள் போராட்டம் காரணமாக பிரதமர் ஆக இருந்த ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ள வங்கதேச இடைக்கால அரசு, நாடு கடத்தும்படி இந்தியாவிடம் கோரிக்கை விடுத்தது. ஆனால், இது குறித்து மத்திய அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை.
இதனிடையே ஷேக் ஹசீனாவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு உள்ளன. அவருக்கு எதிராக வழக்கு நடந்து வருகிறது.
இந்நிலையில், மாணவர்கள் போராட்டத்தின் போது, அதனை ஒடுக்க வேண்டும் என்பதற்காக ஷேக் ஹசீனா மற்றும் இரண்டு உயர் அதிகாரிகள் மனித நேயத்திற்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்டார் என வங்கதேச அரசு குற்றம்சாட்டி உள்ளது.
இது குறித்த வழக்கு விசாரணையின் போது, அரசு வழக்கறிஞர் தஜூல் இஸ்லாம் கூறுகையில், மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்க நடவடிக்கை எடுக்க பாதுகாப்பு படையினர், கட்சி தலைவர்கள் மற்றும் அமைப்புகளுக்கு ஹசீனா நேரடியாக உத்தரவிட்டார். இதனால், ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்புகள் எல்லாம் திட்டமிடப்பட்டவை. ஹசினா தான் அரசின் தலைவர் என்பதால், பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைக்கு அவர் தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் எனக்கூறியதுடன் அது குறித்த வீடியோ ஆதாரங்கள் மற்றும் தகவல்பரிமாற்றங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.இந்த வழக்கில் 81 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.




மேலும்
-
துாய்மை பணிகளில் ஆண்டுக்கு டெண்டர் தொகை 10% உயர்வு
-
வீரியமில்லா கொரோனா பரவலால் புதிய கட்டுப்பாடுகள் கிடையாது
-
அரசு இரிடியம் விற்பதாக மர்ம கும்பல் மோசடி
-
அரசு விளையாட்டு விடுதிகளில் மாணவர் உணவுப்படி உயர்வு நாளொன்றுக்கு ரூ.250ல் இருந்து 350 ஆனது
-
மின் இணைப்பு பெயர் மாற்றத்துக்கு கூடுதல் ஆவணம் கேட்டு அலைக்கழிப்பு
-
ஒப்பந்தப்படி சம்பளம் வரவில்லை; அரசு பஸ் ஊழியர்கள் அதிருப்தி