பிரீமியர் கிரிக்கெட் 2வது தகுதிச்சுற்று போட்டி: மும்பை அணி பேட்டிங்

ஆமதாபாத்: பிரீமியர் கிரிக்கெட் 2வது தகுதிச்சுற்று போட்டியில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி, டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறும் 2வது தகுதிச்சுற்று போட்டியில் மும்பை அணியும் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.
பிரீமியர் லீக் -2025 தொடரைப் பொறுத்தவரை பஞ்சாப் அணியும், மும்பை அணியும் இதுவரை ஆடியிருக்கும் போட்டிகளில் சிறப்பாக விளையாடி இருக்கிறது.
பஞ்சாப் அணி சீரான ஆட்டத்தின் மூலம் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. அதேவேளையில்,மும்பை அணி இந்த தொடரின் பிற்பகுதியில் தான் புது உத்வேகத்தை எடுத்து, தற்போது தகுதி- 2 சுற்றுக்கு வந்திருக்கிறது.
இதில் வெற்றி பெறும் அணி, முதல் தகுதி சுற்றில் வெற்றி பெற்று இறுதிபோட்டிக்கு ஏற்கனவே முன்னேறிய பெங்களூளு அணியுடன் மோத வேண்டும்.
பிரீமியர் லீக் தொடர் -2025 இறுதிபோட்டி,வரும் 3 ஆம் தேதி அன்று நடைபெறுகிறது.
மேலும்
-
ஆடு திருட வந்ததாக கூறி சகோதரர்கள் அடித்துக்கொலை; கிராம மக்களிடம் போலீஸ் விசாரணை
-
வக்ப் சொத்துக்களை பதிவு செய்ய இணையதளம்: ஜூன் 6ல் தொடங்க மத்திய அரசு முடிவு
-
தமிழகத்தில் ஒரே நாளில் 8 பேர் கொலை!
-
புதிய டிரான்ஸ்பார்மர் பழுதாகாமல் இருக்க ஸ்பெஷல் பூஜை; வேற லெவலில் சிந்தித்த மக்கள்
-
கருத்துக் கணிப்பு என்ற பெயரில் பொய்யை விதைக்க முயற்சி; விஜய்க்கு ஆதரவான சர்வே பற்றி முதல்வர் விமர்சனம்
-
ட்ரோன் தாக்குதலில் 5 பேர் பலி; உக்ரைனுக்கு பதிலடி கொடுத்தது ரஷ்யா!