புதிய டிரான்ஸ்பார்மர் பழுதாகாமல் இருக்க ஸ்பெஷல் பூஜை; வேற லெவலில் சிந்தித்த மக்கள்

போபால்: மத்திய பிரதேசத்தில் மின்தடையால் வெறுப்பின் உச்சிக்கே சென்ற மக்கள், புதிய மின்மாற்றிக்கு எதுவும் ஆகக்கூடாது என்று பூஜை செய்து வழிபட்ட நூதன சம்பவம் அரங்கேறி உள்ளது.
இதுபற்றிய விவரம் வருமாறு:
மத்திய பிரதேசத்தில் உள்ளது பிந்த் மாவட்டம். இங்குள்ள காந்தி நகர் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின் வெட்டு மக்களை பாடாய்படுத்தியது. வெயில் தாக்கத்தால் தவித்து வரும் மக்களுக்கு மின்சாரம் தடைபடுவது பெரும் இம்சையாக மாறியது.
மின் தடையால் நொந்து போன அவர்கள், ஒரு கட்டத்தில் எம்.எல்.ஏ., நரேந்திர சிங் குஷ்வாகாவிடம் முறையிட்டனர். இந் நிலையில் பழுதான மின்மாற்றியை மாற்ற அரசு தரப்பில் ஒப்புதல் அளிக்கப்பட, சம்பந்தப்பட்ட காந்தி நகர் பகுதிக்கு ஒரு புதிய மின்மாற்றி அனுப்பி வைக்கப்பட்டது.
அங்கு சென்ற மின் ஊழியர்கள், புதிய மின்மாற்றியை பொருத்திவிட்டு சென்றனர். அவர்கள் சென்ற அடுத்த கணமே, மின்மாற்றிக்கு உள்ளூர் மக்கள் பூஜை செய்து வழிபட ஆரம்பித்தனர். மின்மாற்றிக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது, ஏதேனும் ஏற்பட்டால் மீண்டும் மின்தடை நிலவும் என்று கூறி, கடவுளிடம் வேண்டினர்.
பின்னர் இந்த மின்மாற்றி நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் வழிபட்டு, இனிப்புகளை வழங்கி தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
இதுகுறித்து பேசிய உள்ளூர்வாசி ஒருவர், முன்பு எல்லாம் மனிதர்கள் நீண்ட ஆயுளுக்காக பிரார்த்தனை செய்தனர். தற்போது மின்மாற்றி நீண்ட ஆயுளுடன் இருக்க பூஜை செய்துள்ளோம். இது எங்களுக்கு முதல் முறை என்றார்.
மேலும்
-
பொது - வடசென்னை மின் நிலையம் உற்பத்தி பாதிப்பு
-
பட்டேல் சாலை 70 அடி அகலமாக விரிவாக்கம் 'யு - டர்ன்' அமைத்து நெரிசல் குறைக்கவும் முடிவு
-
ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு
-
பள்ளிக்கரணை ஆணவ கொலை வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்ற கோரிய மனு தள்ளுபடி
-
குர்பானிக்காக வந்த 30,000 ஆடுகள் களை கட்டத் தொடங்கியது சந்தை
-
நலவாரிய உறுப்பினராக முகாம் ஆதரவற்ற பெண்களுக்கு அழைப்பு