வக்ப் சொத்துக்களை பதிவு செய்ய இணையதளம்: ஜூன் 6ல் தொடங்க மத்திய அரசு முடிவு

புதுடில்லி: வக்ப் சொத்துக்களை பதிவு செய்வதற்காக, இணையதளத்தை (வக்ப் சொத்து மேலாண்மைக்கான உமீத் போர்டல்) ஜூன் 6ம் தேதி மத்திய அரசு தொடங்க உள்ளது.
வக்ப் போர்டு சொத்து தொடர்பாக பார்லி.,யில் நிறைவேற்றப்பட்ட சட்டத் திருத்தத்திற்கு எதிராக, காங்கிரஸ், சமாஜ்வாதி, தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், ஏராளமான முஸ்லிம் அமைப்புகள் என, 100க்கும் அதிகமான மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீதான விவாதம் சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்நிலையில், வக்ப் சொத்துக்களை பதிவு செய்வதற்காக, இணையதளத்தை (வக்ப் சொத்து மேலாண்மைக்கான உமீத் போர்டல்) ஜூன் 6ம் தேதி மத்திய அரசு தொடங்க உள்ளது.
இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:
* நாடு முழுவதும் உள்ள வக்ப் சொத்துக்களை பதிவு செய்ய, இந்த இணையதளம் தொடங்கப்படுகிறது.
* அனைத்து வக்ப் சொத்துக்களும் 6 மாதங்களுக்குள் விரிவான தகவலுடன் பதிவு செய்யப்பட வேண்டும்.
* சலுகைக் காலத்திற்குப் பிறகு பதிவு செய்யப்படாத சொத்துக்கள் சர்ச்சைக்குரியதாக கருதப்படும்.
* சொத்துக்களின் நீளம், அகலம் மற்றும் புவிசார் குறிச்சொற்கள் கொண்ட இடங்கள் உள்ளிட்ட விரிவான விளக்கங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வக்ப் திருத்த சட்ட மசோதா பார்லிமென்டில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சமீபத்தில், இந்த மசோதாவுக்கு திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்த நிலையில், வக்ப் சொத்துக்களை பதிவு செய்ய போர்டல் தொடங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.




மேலும்
-
காலாவதி மருந்துகள் வைத்திருந்த இரு மருத்துவமனைகளுக்கு 'சீல்'
-
நிலம் வழங்கிய விவசாயிகள் நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டம்
-
சாலையை கடந்த மான் லாரியில் அடிபட்டு பலி
-
இரு லாரிகள் மோதிய விபத்து இடையில் சிக்கி ஓட்டுநர் பலி
-
மலேசிய பயணிகள் மீது வனத்துறை தாக்குதல்
-
கடையநல்லூர் அருகே கொட்டும் மழையில் குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்