மும்பை விமான நிலையத்தில் பயணியிடம் 48 கொடிய விஷப் பாம்புகள் பறிமுதல்!

12

மும்பை: தாய்லாந்தில் இருந்து மும்பை விமான நிலையத்திற்கு வந்த பயணியிடமிருந்து 48 கொடிய விஷப் பாம்புகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று இரவு தாய்லாந்தின் பாங்காக்கிலிருந்து ஒரு பயணி வந்திறங்கினார். சந்தேகத்திற்கிடமான நிலையில் வந்த அந்த பயணியை, சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அந்த பயணியின் உடமைகளை பரிசோதித்து பார்த்தபோது, 48 விஷ பாம்புகள் மற்றும் 5 ஆமைகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


வனவிலங்கு நல சங்க குழுவினர் உதவியுடன் விஷ பாம்புகள் குறித்து இனங்களை அடையாளம் காணப்பட்டது. வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் விதிகளின்படி, ஊர்வனவற்றை அவை கொண்டு வரப்பட்ட நாட்டிற்கு திருப்பி அனுப்ப வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டுப் பணியகம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement