அமராவதி அணையில் கூடுதல் நீர் திறக்கப்படுமா?
திருப்பூர் : மேற்கு தொடர்ச்சி மலை நீர் பிடிப்பு பகுதிகள் அமராவதி அணைக்கு நீர் ஆதாரமாக உள்ளன. முன்னதாகவே துவங்கியுள்ள தென் மேற்கு பருவ மழை மூலம், அதிக மழை பெறப்பட்டுள்ளது.
அணை அதன் கொள்ளளவான 90 அடியில் தற்போது 80 அடி நீர் நிரம்பி நிற்கிறது. அணை நிரம்பும் நிலையில் குறிப்பிட்ட அளவு நீர் திறந்து விடப்படும்.
அணையில் நீர் திறக்கப்பட்டு மூன்று மாதங்களாகிறது. அணையிலிருந்து வெளியேறும் நீர் அமராவதி ஆற்றில் பாசன மற்றும் குடிநீர் தேவைகளை பூர்த்திசெய்யும் வகையில் பயன்தரும். இருப்பினும், தாராபுரம் வரை மட்டுமே சென்றடையும் வகையில் இதுவரை நீர் திறக்கப்பட்டு வருகிறது.
''தாராபுரத்தை கடந்து, மயில்ரங்கம், சின்ன தாராபுரம், அரவக்குறிச்சி வழியாக கரூர் வரை இந்த ஆறு பாய்ந்து, வழியோர கிராமங்களுக்கு பயன் தர வேண்டும்.
இரு கரைகளிலும் உள்ள தென்னை பயிரிட்டுள்ள விவசாய நிலங்களுக்கும், வழியோர கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் இது உள்ளது. தற்போது அணை முற்றிலும் நிரம்பியுள்ள நிலையில் அதிகளவில் நீர் திறக்கப்பட்டு, மாவட்ட எல்லை மற்றும் கரூர் மாவட்ட பகுதிகளுக்கும் பயன் தரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என, அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும்
-
இந்தியா வீரர் சுபான்ஷூ சுக்லாவின் விண்வெளி பயணம் மீண்டும் ஒத்திவைப்பு
-
நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்: கட்சிகளுடன் அமைச்சர் ஆலோசனை
-
ஆட்சியாளர்களை ஆசிரியர்கள் சுட்டெரிப்பார்கள்: இ.பி.எஸ்., காட்டம்
-
தி.மு.க., பிரமுகர் படுகொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள்
-
துணைவேந்தர் நியமனத்திற்கு தடை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு
-
பிரீமியர் கிரிக்கெட் பைனல்: பஞ்சாப் அணிக்கு 191 ரன் இலக்கு