இந்தியா வீரர் சுபான்ஷூ சுக்லாவின் விண்வெளி பயணம் மீண்டும் ஒத்திவைப்பு

1

புதுடில்லி: 'ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ் - 4' என்ற திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையம் செல்லும் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லாவின் பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.


நாசா' எனப்படும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் இணைந்து, 2025ல், 'ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்- 4' என்ற திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்ப உள்ளது. கடந்த மே மாதம் 29 ம் தேதி புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து, சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா செல்வதாக இருந்தது. இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லாவுக்கு இந்திய விமானப்படையில் அனுபவம் வாய்ந்த விமானியாக இருந்தார்.

ஆனால், இந்த பயணம் வரும் 8 ம் தேதி மாலை 6:41 மணிக்கு விண்வெளிமையம் செல்வதாக இருந்தது. இந்நிலையில், இந்த பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. வரும் 10ம் தேதி மாலை 5:52 மணிக்கு சுபான்ஷூ சுக்லா விண்வெளி மையம் செல்வார் என ஆக்ஸியாம் விண்வெளி மையம் தெரிவித்து உள்ளது. ஒத்திவைப்பிற்கான காரணம் அறிவிக்கப்படவில்லை.

சுபான்ஷூ சுக்லா தற்போது, புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் தனிமைபடுத்தப்பட்டு உள்ளார். அவரது உடல்நிலையை கண்காணிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. விண்வெளி செல்வதற்கான தகுதியுடனும் ஆரோக்கியத்துடனும் அவர் உள்ளார்.

Advertisement