வரத்து குறைவால் உயர்ந்தது மீன் விலை உச்சத்தை தொட்டது; வஞ்சிரம்; கிலோ ரூ. 2,200

போத்தனூர் : கோவையில் வரத்து குறைவால் கடல் மீன்களின் விலை உயர்ந்தது.
மாநிலம் முழுவதும் ஏப்., 15 முதல், வரும் 14ம் தேதி வரை மீன்பிடி தடைக்காலமாகும். மீன்களின் இனப்பெருக்கத்திற்காக இந்நடைமுறை பின்பற்றப்படுகிறது.
இக்கால கட்டத்தில் கடலில் சிறு படகுகளில் குறைந்த துாரத்திற்கு மட்டுமே சென்று மீன் பிடிக்க வேண்டும். இதனால், அதிகளவு மீன்கள் கிடைக்காது.
கிடைக்கும் சிறு அளவிலான மீன்களும் கடலோரத்திலேயே வியாபாரிகளால் வாங்கப்பட்டு விடும். கடலோர மாவட்டங்களை தவிர்த்து, பிற மாவட்டங்களுக்கு மீன்கள் அனுப்புவது குறையும்.
அவ்வகையில் தற்போது கோவை மாவட்டத்திலும் கடல் மீன்களின் வரத்து குறைந்துள்ளது. இதனால் மீன்களின் விலை உயர்ந்துள்ளது. கட்லா, ரோகு, வாவல், நெய் மீன் உள்ளிட்ட அணை மீன்களின் வரத்து குறையவில்லை; விலையிலும் மாற்றமில்லை.
குனியமுத்துாரை சேர்ந்த மீன் கடை உரிமையாளர் ராஜேஷ்குமார் கூறியதாவது:
மீன்பிடி தடைக்காலத்தில், கேரளாவிலிருந்து தேவையான மீன்கள் வரும். மீன்களின் விலையில் பெரிய மாற்றம் இருக்காது. தற்போது தென்மேற்கு பருவக்காற்றால் கேரளாவில் கனமழை பெய்கிறது. மீன் வரத்து, 70 சதவீதத்திற்கும் மேல் குறைந்துவிட்டது.
உதாரணமாக, ரூ. 150 முதல் 250 வரை விற்பனையாகும் மத்தி மீன் தற்போது, ரூ. 350 - - 450 வரை விற்கப்படுகிறது. வஞ்சிரம், ரூ. 1800 முதல்- 2,200 வரை விற்கப்படுவது, இதுவே முதல் முறை. இதனால், 30 -முதல் 40 சதவீத கடல் மீன் பிரியர்கள் கடைக்கு வருவது குறைந்துள்ளது.
அதே நேரத்தில், விலை உயர்வால் விற்பனையாளர்களுக்கு அதிகம் பாதிப்பில்லை.
கடந்த பல ஆண்டுகளுக்கு பின் தற்போதுதான் இத்தகைய விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கடல் மீன்களின் நேற்றைய விலை விபரம்: (அடைப்புக்குள் பழைய விலை)
சால்மன் பெரியது, 1350 (900)
கொடுவா 700 ( 580)
தேங்க பாறை பெரியது. 700 (500)
கலிங்கா முரல், 700 (400)
விலா மீன், 750 (550)
நீல நண்டு, 800 (550)
மத்தி பெரியது, 450 (250)
சங்கரா 400 (250)
கிழங்கா, 299 (1801)
அயிலை, 450 (200),
அயிலை மீன் பெரியது, 750 (500)
பச்சை முரல் 700 (450)
சூரை மீன் 400 (300)
மேலும்
-
நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்: கட்சிகளுடன் அமைச்சர் ஆலோசனை
-
ஆட்சியாளர்களை ஆசிரியர்கள் சுட்டெரிப்பார்கள்: இ.பி.எஸ்., காட்டம்
-
தி.மு.க., பிரமுகர் படுகொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள்
-
துணைவேந்தர் நியமனத்திற்கு தடை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு
-
பிரீமியர் கிரிக்கெட் பைனல்: பஞ்சாப் அணிக்கு 191 ரன் இலக்கு
-
அரையிறுதியில் சபலென்கா-ஸ்வியாடெக் * பிரெஞ்ச் ஓபனில்...