அரையிறுதியில் சபலென்கா-ஸ்வியாடெக் * பிரெஞ்ச் ஓபனில்...

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் பாரிசில் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் காலிறுதியில் உலகின் 'நம்பர்-1', பெலாரசின் சபலென்கா, 8வது இடத்திலுள்ள சீனாவின் குயின்வென் ஜெங்கை எதிர்கொண்டார். முதல் செட் இருவரும் சமபலத்தை வெளிப்படுத்த 6-6 என சமன் ஆனது. பின் நடந்த 'டை பிரேக்கரில்' சபலென்கா 7-6 என வசப்படுத்தினார். தொடர்ந்து இரண்டாவது செட்டையும் 6-3 என கைப்பற்றினார். முடிவில் சபலென்கா 7-6, 6-2 என நேர் செட்டில் வெற்றி பெற்றார். 2023க்குப் பின் மீண்டும் இத்தொடரின் அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதியில், இத்தொடரில் 'ஹாட்ரிக்' (2022, 2023, 2024) உட்பட 4 முறை கோப்பை வென்ற போலந்தின் ஸ்வியாடெக் ('நம்பர்-5'), உக்ரைனின் ஸ்விட்டோலினா ('நம்பர்-13') மோதினர். இதில் ஸ்வியாடெக் 6-1, 7-5 என நேர் செட்டில் வென்று, அரையிறுதிக்குள் நுழைந்தார். பிரெஞ்ச் ஓபனில் தொடர்ந்து 26வது வெற்றி பெற்ற ஸ்வியாடெக், அரையிறுதியில் சபலென்காவை சந்திக்க உள்ளார்.
காலிறுதியில் சின்னர்
ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் உலகின் 'நம்பர்-1' வீரர், இத்தாலியின் சின்னர், ரஷ்யாவின் ரூபலெவ் ('நம்பர்-17') மோதினர். இதில் சின்னர் 6-1, 6-3, 6-4 என நேர் செட்டில் வென்று, அரையிறுதிக்குள் நுழைந்தார்.
மேலும்
-
போக்குவரத்து துறை பழுதாகி விட்டதா: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி
-
தி.மு.க., எண்ணம் கானல் நீராகும்: உறுதியுடன் சொல்கிறார் இ.பி.எஸ்.,
-
பயங்கரவாத செயல்களின் குற்றவாளி பாகிஸ்தான்: இந்தியாவை ஆதரிக்க காங்., வலியுறுத்தல்
-
அதற்கும் பா.ஜ.,வுக்கும் தொடர்பு இல்லை; சொல்கிறார் பா.ஜ., தலைவர் நயினார்!
-
தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றினார் ராஜேஸ்வரி; சென்னை ஐ.ஐ.டி.,யில் இடம் பிடித்த பழங்குடி மாணவி நெகிழ்ச்சி!
-
ராமதாஸை குருமூர்த்தி சந்தித்ததும் திருமாவளவனுக்கு ஏன் இத்தனை பதற்றம்?