300 கிலோ புகையிலை பதுக்கியவர் கைது

சேலம்: சேலம், கன்னங்குறிச்சி போலீசார் நேற்று, கோரிமேட்டில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒருவரை பிடித்து விசாரித்ததில், சேலம், ஜாகீர் அம்மாபாளையத்தை சேர்ந்த அப்துல்முனாப், 44, என்பதும், புகையிலை பொருட்களை விற்க முயன்றதும் தெரிந்தது.


தொடர்ந்து அவரது வீட்டுக்கு சென்று, போலீசார் சோதனை செய்தனர். அருகே உள்ள அவரது குடோனில் நடத்திய சோதனையில், மூட்டை, மூட்டையாக, 6.50 லட்சம் ரூபாய் மதிப்பில், 300 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தன. பறிமுதல் செய்த போலீசார், அப்துல் முனாப்பை கைது செய்தனர்.

Advertisement