பழுதான கண்காணிப்பு கேமரா வில்லிவாக்கத்தில் சீரமைப்பு

வில்லிவாக்கம், குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டறியவும், விபத்து ஏற்படுத்திச் செல்லும் வாகனங்களை அடையாளம் காணும் வகையிலும், சென்னை முழுதும் கண்காணிப்பு 'கேமரா'க்கள் பொருத்தப்பட்டன.
அவை முறையாக பராமரிக்கப்படாமல், பல இடங்களில் பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் பழுது காரணமாக, குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் சிக்கல் நிலவுகிறது.
குறிப்பாக, வில்லிவாக்கம் சிட்கோ நகர், நான்காவது பிரதான சாலையின் நான்கு முனை சந்திப்பில் உள்ள கேமராக்கள், பல மாதங்களாக உடைந்து தொங்கியபடி இருந்தன.
அதேபோல், தெற்கு ஜெகன்நாத நகர் இரண்டாது பிரதான சாலையிலும், கேமரா இல்லாமல் கம்பங்கள் மட்டும் சாலையில் சாய்ந்து கேட்பாரற்று கிடந்தன.
இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, வில்லிவாக்கம் போலீசார் நடவடிக்கை எடுத்து, பழதடைந்த கேமராக்களை தற்காலிமாக சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.
மேலும்
-
தொன்மை வாய்ந்த கோவிலை தெருவில் விட்டது அரசு: பொன்.மாணிக்கவேல் குற்றச்சாட்டு
-
அனைவருக்குமான பொருளாதாரம் தேவை: கேட்கிறார் ராகுல்
-
20 மாதங்களுக்கு பின் பிணைக்கைதிகள் 2 பேர் உடல் மீட்பு; ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் சபதம்
-
டில்லி கோர்ட்டில் விசாரணைக்கைதிகள் தாக்குதல்: இன்னொரு கைதி கழுத்து நெரித்து கொலை
-
சத்தீஸ்கரில் முக்கிய நக்சலைட் தலைவன் சுட்டுக் கொலை: பாதுகாப்பு படையினர் அதிரடி
-
இடத்தை அளந்து தர ரூ. 3 ஆயிரம் லஞ்சம்; கையும், களவுமாக சிக்கினார் சர்வேயர்!