மின்சார இணைப்பு தராததால் பள்ளியை புறக்கணித்த மாணவர்கள்

அன்னுார் : பொகலூர் ஊராட்சி, கூளே கவுண்டன் புதூரில், 30 குடும்பங்கள் வசிக்கின்றன.
இந்த குடும்பத்தினர் தங்களுக்கு வீட்டு மனை பட்டா மற்றும் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என கோரி வருகின்றனர்.
எனினும் அப்பகுதி ஆட்சேபனைக்குரிய பகுதி என்று கூறி வருவாய் துறை அதிகாரிகள் பட்டா தர மறுத்து வந்தனர்.
நேற்று அப்பகுதி பெற்றோர் எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று கூறி பள்ளி புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தினர்.
அங்கு கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த மேடையில், மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோபி ராசிபுரம் துவக்கப்பள்ளி மற்றும் பொகலூர் நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த 18 மாணவ, மாணவியர் நேற்று பள்ளிக்கு செல்லவில்லை. தகவல் அறிந்து, கோவை வடக்கு ஆர்.டி.ஓ., கோவிந்தன், தாசில்தார் யமுனா, வருவாய் ஆய்வாளர் குருநாதன் உள்ளிட்டோர் அங்கு சென்று பெற்றோரிடம் பேச்சு நடத்தினர்.
அதிகாரிகள் கூறுகையில், 'இரண்டு மாதத்திற்குள் உங்களுக்கு வேறு இடத்தில் இடம் ஒதுக்கி பட்டா தரப்படும். எனவே பள்ளிக்கு குழந்தைகளை அனுப்புங்கள்,' என்றனர்.
பெற்றோர் கூறுகையில், 'இரண்டு மாதங்களில் இடம் ஒதுக்குவதை ஏற்றுக் கொள்கிறோம். எனினும் தற்போது குழந்தைகள் படிக்க முடியாமல் தவிக்கின்றன.
உடனடியாக தற்காலிக மின் இணைப்பு தர வேண்டும். அதன் பிறகு தான் எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவோம்,' என்றனர்.
இதைத் தொடர்ந்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும்படி அதிகாரிகள் அறிவுறுத்திவிட்டு சென்றனர்.
மேலும்
-
11 பேர் உயிரிழந்த நிலையில் தேவையா இந்த கொண்டாட்டம்; ரசிகர்கள் கொந்தளிப்பு
-
2027ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு; மத்திய அரசு அறிவிப்பு
-
இந்தியா குறித்து பிலாவல் பூட்டோ உளறல்: ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த பத்திரிகையாளர்
-
பெங்களூரு வெற்றி கொண்டாட்டத்தில் சோகம்; கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் பலி
-
டில்லி ரோஹினியில் மூன்று மாடி கட்டடம் இடிந்து விழுந்தது: பலர் சிக்கி உள்ளதாக அச்சம்
-
பாகிஸ்தானுக்கு ரூ,6,700 கோடி கடன்; ஆசிய வளர்ச்சி வங்கி முடிவுக்கு இந்தியா கண்டனம்