தனக்குத்தானே சூனியம் வைத்துக்கொண்ட தி.மு.க.,

1

மதுரையில் முதல்வரின் 'ரோடு ஷோ'விற்கு, பந்தல்குடி கால்வாயை துணியால் மறைத்ததை சுட்டிக்காட்டியதற்கு தி.மு.க.,வினர் என்னை விமர்சித்தனர்.


அ.தி.மு.க., ஆட்சியில் 2.50 கோடி ரூபாயில் பந்தல்குடி கால்வாய் கழிவுநீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்த நடவடிக்கை எடுத்தோம். ஆட்சி மாற்றத்துக்கு பின், திட்டம் நிறுத்தப்பட்டது.


மதுரையில் தி.மு.க., பொதுக்குழு எப்போதெல்லாம் கூடுகிறதோ, அடுத்த 10 ஆண்டுகளுக்கு அவர்களால் ஆட்சிக்கு வர முடியாது. 1977ல் மதுரையில் நடந்த தி.மு.க., பொதுக்குழுவுக்கு பின், 12 ஆண்டுகள் அ.தி.மு.க., ஆட்சி தான். மதுரையில் பொதுக்குழு நடத்தி தனக்குத் தானே சூனியம் வைத்துக்கொண்ட தி.மு.க., இனி 10 ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு வர முடியாது.

செல்லுார் ராஜு,

முன்னாள் அமைச்சர் அ.தி.மு.க.,

Advertisement