கனரா வங்கியில் 59 கிலோ தங்கம் கொள்ளை: கர்நாடகாவில் துணிகர சம்பவம்

பெங்களூரு: கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டத்தில் உள்ள கனரா வங்கிக் கிளையில், அடகு வைக்கப்பட்ட 59 கிலோ தங்கம் மற்றும் ரூ.5.2 லட்சம் ரொக்கப்பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து தப்பினர்.
இந்த கொள்ளை சம்பவம் கடந்த மே 25ம் தேதி பசவன காகேவாடி தாலுகாவில் அமைந்துள்ள மனகுலி நகரில் உள்ள கனரா வங்கி கிளையில் நடந்துள்ளது.
மறுநாள் மங்கோடியில் உள்ள கனரா வங்கி மேலாளர் போலீசில் புகார் அளித்தார்.
விஜயபுரா எஸ்.பி., லக்ஷ்மன் நிம்பர்கி கூறியதாவது:
கடந்த மே 24ம் தேதி, நான்காவது சனிக்கிழமை, வங்கி விடுமுறையால் நாள் முழுவதும் மூடப்பட்டிருந்தது. அடுத்த நாள் 25ம் தேதி பகுதி நேர துப்புரவு பணியாளர் சுத்தம் செய்ய வந்தபோது, ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டது தெரியவந்தது. முழுமையான மதிப்பீட்டிற்குப் பிறகு, 59 கிலோ தங்கம் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
கொள்ளையடிக்கப்பட்ட தங்கம் தங்கக் கடன்களுக்காக அடகு வைத்த வாடிக்கையாளர்களுடையது.
வங்கியின் அலாரத்தை செயலிழக்க வைத்து, போலி சாவியைப் பயன்படுத்தி இந்த கொள்ளை அரங்கேற்றப்பட்டுள்ளது.
விசாரணையைத் திசை திருப்பவும், விசாரணைக்கு வரும் போலீசாரை அச்சுறுத்தவும் ஒரு கருப்பு மந்திர பொம்மை சம்பவ இடத்தில் விடப்பட்டிருந்தது.
இரண்டு நாட்கள் வங்கியைக் கண்காணித்த பிறகு கொள்ளையர்கள் வங்கிக்குள் நுழைந்ததாகத் தெரிகிறது.
இது குற்றவாளிகளுக்கு வங்கியின் உள் அமைப்பு குறித்து முன்பே தெரியும் என்பதைக் காட்டுகிறது.
புலனாய்வாளர்களை தவறாக வழிநடத்தவும், வழக்கின் முன்னேற்றத்தை தாமதப்படுத்தவும் வேண்டுமென்றே செய்யப்பட்ட செயல் என தோன்றுகிறது.
அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறோம். வழக்கை மேலும் விசாரிக்க 8 குழுக்களை அமைத்துள்ளோம். குற்றம் சாட்டப்பட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.








மேலும்
-
திரும்பத் திரும்ப பொய் சொல்கிறார் ராகுல்; பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி குற்றச்சாட்டு
-
டில்லி இல்லத்தில் 'சிந்தூர்' மரக்கன்றை நட்டார் பிரதமர் மோடி; இணையத்தில் வீடியோ வைரல்!
-
சுற்றுச்சூழலை காக்கும் ஹீரோக்கள் தான் வனக்காவலர்கள்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
-
பெங்களூரு கோர சம்பவம்; தாமாக முன்வந்து இன்று பிற்பகல் விசாரிக்கிறது நீதிமன்றம்
-
போர் நிறுத்தத்தில் அமெரிக்கா தலையீடு கிடையாது; ராகுலின் பேச்சை நிராகரித்த காங்., எம்.பி., சசி தரூர்
-
நாடு முழுவதும் 4,866 பேர் கொரோனாவால் பாதிப்பு; 24 மணி நேரத்தில் 7 பேர் பலி