டில்லி இல்லத்தில் 'சிந்தூர்' மரக்கன்றை நட்டார் பிரதமர் மோடி; இணையத்தில் வீடியோ வைரல்!

புதுடில்லி: டில்லியில் தனது இல்லத்தில் பிரதமர் மோடி 'சிந்தூர்' மரக்கன்றை நட்டார். அவர் மண்வெட்டி வைத்து குழி தோண்டி, மரக்கன்றை நடும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
பூமியின் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஜூன் 5ல் உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலக சுற்றுச்சூழல் தினமான இன்று டில்லியில் உள்ள தனது இல்லத்தில் பிரதமர் மோடி 'சிந்தூர்' மரக்கன்றை நட்டார். அவர் மண்வெட்டி வைத்து குழி தோண்டி மரக்கன்றை நடும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சமீபத்தில் கட்ச் நகருக்கு விஜயம் செய்தபோது, 1971ம் ஆண்டு போரில் குறிப்பிடத்தக்க துணிச்சலை வெளிப்படுத்திய பெண்கள் குழு பிரதமர் மோடியைச் சந்தித்து சிந்தூர் மரக்கன்றுகளை வழங்கியது. இந்த மரக்கன்றை நடவு செய்து பராமரிப்பேன் என அந்த பெண் குழுவிடம் பிரதமர் மோடி கூறியிருந்தார். தற்போது அந்த வாக்குறுதியை பிரதமர் மோடி நிறைவேற்றி உள்ளார்.
பஸ் சேவை!
இதற்கிடையே, சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு டில்லியில் 200 எலெக்ட்ரிக் பஸ் சேவைகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது பிரதமர் மோடி உடன் டில்லி துணைநிலை கவர்னர் சக்சேனா, டில்லி முதல்வர் ரேகா குப்தா, மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
வாசகர் கருத்து (4)
Arul. K - Hougang,இந்தியா
05 ஜூன்,2025 - 15:30 Report Abuse

0
0
Reply
அசோகன் - ,
05 ஜூன்,2025 - 15:11 Report Abuse

0
0
Reply
பாரத புதல்வன் - ,
05 ஜூன்,2025 - 15:10 Report Abuse

0
0
Reply
சிட்டுக்குருவி - chennai,இந்தியா
05 ஜூன்,2025 - 14:25 Report Abuse

0
0
Reply
மேலும்
-
டிரம்பின் அதிபர் பதவியை துணை அதிபருக்கு கொடுக்க மஸ்க் விருப்பம்; ஜே.டி வான்ஸ் பதில் இதுதான்!
-
ஜி7 மாநாடு; பிரதமர் மோடியை அழைத்தார் கனடா பிரதமர்
-
நடுவானில் பறந்த அப்பாச்சி ஹெலிகாப்டர்; திடீரென தரை இறங்கியதால் பரபரப்பு
-
மருதமலை முருகன் கோவிலுக்கு வாகனங்களில் செல்ல கட்டுப்பாடு: கோவில் நிர்வாகம் அறிவிப்பு
-
செயற்கைக்கோள் வழி இணைய சேவை: எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு லைசென்ஸ்
-
தென் மாநிலங்களின் ஜனநாயக வலிமை குறையும்: முதல்வர் ஸ்டாலின்
Advertisement
Advertisement