கோடம்பாக்கம் பகுதியில் விளையாட்டு திடல் திறப்பு

வடபழனி :கோடம்பாக்கம் மண்டலம், 130வது வார்டு, வடபழனி அம்மன் கோவில் தெருவில், தி.நகர் தி.மு.க., - எம்.எல்.ஏ., கருணாநிதி தொகுதி மேம்பாட்டு நிதியில், 75 லட்சம் ரூபாய் மதிப்பில், விளையாட்டு திடல் மற்றும் பூங்கா அமைக்கப்பட்டது.
இந்த விளையாட்டு திடலில், கபடி, பூப்பந்து, கிரிக்கெட், கேரம் போர்டு உள்ளிட்ட விளையாட்டு மையங்கள் அமைந்துள்ளன. இதை, அமைச்சர் நேரு நேற்று திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில், எம்.எல்.ஏ., கருணாநிதி, மயிலாப்பூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., வேலு, எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன், கவுன்சிலர்கள் பாஸ்கர், ஏழுமலை, மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
செய்தியாளர்களிடம், எம்.எல்.ஏ., கருணாநிதி பேசியபோது, அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியான இங்கு, பொழுது போக்கு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், இந்த விளையாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது,” என்றார்.
மேலும்
-
20 மாதங்களுக்கு பின் பிணைக்கைதிகள் 2 பேர் உடல் மீட்பு; ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் சபதம்
-
டில்லி கோர்ட்டில் விசாரணைக்கைதிகள் தாக்குதல்: இன்னொரு கைதி கழுத்து நெரித்து கொலை
-
சத்தீஸ்கரில் முக்கிய நக்சலைட் தலைவன் சுட்டுக் கொலை: பாதுகாப்பு படையினர் அதிரடி
-
இடத்தை அளந்து தர ரூ. 3 ஆயிரம் லஞ்சம்; கையும், களவுமாக சிக்கினார் சர்வேயர்!
-
வியாட்நாமில் சாலை விபத்து: இந்திய மாணவர் உயிரிழப்பு
-
இக்கட்டான நேரத்தில் கைகொடுத்த ரபேல் விமானங்கள்; முதன் முறையாக பாகங்களை இந்தியாவில் தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்து!