இடத்தை அளந்து தர ரூ. 3 ஆயிரம் லஞ்சம்; கையும், களவுமாக சிக்கினார் சர்வேயர்!

மதுரை: மதுரை தெற்கு தாலுகா அலுவலகத்தில் ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் ராஜசேகர் கையும், களவுமாக கைது செய்யப்பட்டார்.
மதுரை சுந்தரராஜபுரம் அருகே ரத்தினபுரத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். சென்னையில் டாஸ்மாக் மேற்பார்வையாளராக உள்ளார். இவருக்கு கோவலன் நகர் அருகே சுப்புலட்சுமிநகரில் இரண்டே முக்கால் சென்ட் நிலம் உள்ளது. கடந்த பிப்ரவரியில் இந்த இடத்திற்கான நான்கு மால்களையும் அளந்து தரும்படி விண்ணப்பித்தார்.
மதுரை தெற்கு தாலுகா சர்வே பிரிவில் உள்ளவர்கள் விண்ணப்பத்தை பரிசீலித்து இடத்தை பார்க்கவோ, அளந்து தரவோ முன்வரவில்லை. அதேசமயம் மூன்று மாதத்திற்குள் முடிக்கும் எண்ணத்தில் மே 11ல் விண்ணப்பத்திற்கு 'அப்ரூவ்ட்' என வழங்கி முடித்துவிட்டனர். அதேநேரம் இடத்தை அளந்து தருவதற்கு மீண்டும் விண்ணப்பிக்கும்படி சர்வேயர் ராஜசேகர் தெரிவித்தார்.
இதையடுத்து பாலமுருகன் மே 31ல் மீண்டும் விண்ணப்பித்தார். அதன்பின்னும் இடத்தை அளக்கவரவில்லை. அவரை தாலுகா அலுவலகத்திற்கு வரவழைத்து ரூ.3 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என கேட்டுள்ளார். இதையடுத்து பாலமுருகன் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.
அலுவலகத்தில் வைத்து பாலமுருகனிடம் இருந்து பணத்தை பெற்ற சர்வேயர் ராஜசேகரை ஏ.டி.எஸ்.பி., சத்யசீலன், இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்பிரபு, பாரதிபிரியா கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.










மேலும்
-
உக்ரைனுக்கு பதிலடி: 400 ட்ரோன், 40 ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல்
-
ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவதூறு: குஜராத்தில் காங்., தலைவர் கைது
-
ரூ.45 லட்சம் வெகுமதி: இருமாநிலங்கள் தேடிய இன்னொரு நக்சலைட் தலைவன் சுட்டுக் கொலை
-
இந்திய ஜோடி ஏமாற்றம்
-
இதற்கு மேல் அரசு என்ன செய்ய வேண்டும்: கர்நாடக துணை முதல்வர் கேள்வி
-
நான் பேசியதை அண்ணாமலை வெளியிடட்டும்: அமைச்சர் மா.சு., பதில்