மாநில நிர்வாகிகள் கூட்டம்

விருதுநகர்: விருதுநகரில் தமிழ்நாடு பஞ்சாலை தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் மாநிலத் தலைவர் சந்திரன் தலைமையில் நடந்தது. இதில் பொதுச் செயலாளர் அசோகன், பொருளாளர் சக்திவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.

இதில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் நான்கு ஆண்டுகளாக செயல்படாத தேசிய பஞ்சாலைகள், கோவை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில் மூடப்பட்ட ஏழு ஆலைகளை திறந்து செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச கூலியை நிர்ணயம் செய்து அமல்படுத்த வேண்டும் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Advertisement