போலீஸ் செய்திகள்

திருச்சுழி: காரியாபட்டி அருகே தண்டியனேந்தலை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் 45, இவர் ஷேர் ஆட்டோ டிரைவராக இருந்தார்.

நேற்று காலை 9:00 மணிக்கு வாடிக்கையாளர் ஒருவரை ஏற்றிக்கொண்டு திருச்சுழி - கமுதி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது முத்துராமலிங்கபுரம்புதுார் பகுதியில் ரோட்டின் குறுக்கே நாய் வந்ததால் ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காயமடைந்த ரவிச்சந்திரன் இறந்தார். திருச்சுழி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement