செயற்கை கால் அளவீட்டு முகாம்
திருப்பூர்,; மாற்றுத்திறனாளிகள் இலவச செயற்கை கால் பெறுவதற்கான அளவீட்டு முகாம், 8ம் தேதி நடக்க உள்ளது.
தேசிய மாற்றுத்திறனாளிகள் நலன் காக்கும் அமைப்பாகிய சக் ஷம் சார்பில், தன்னார்வ பொதுநல அமைப்புகளுடன் இணைந்து, மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக செயற்கை கால் வழங்கி வருகிறது.
அதற்கான அளவீட்டு முகாம், மாதமாதம் நடந்து வருகிறது. அதன்படி, திருப்பூர், மங்கலம் ரோடு, பூச்சக்காடு செல்வ விநாயகர் கோவில் மண்டபத்தில், வரும், 8ம் தேதி செயற்கை கால் அளவீட்டு முகாம் நடக்க உள்ளது.
செயற்கை கால் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள், போட்டோ, ஆதார் அட்டை, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை ஆகியவற்றுடன், காலை, 9:00 மணிக்கு முகாமிற்கு வரலாம். முகாம், 9:30 முதல், மதியம், 1:30 மணி வரை நடக்கும். மேலும் விவரங்களுக்கு, 93630 32998 என்ற எண்களில் அணுகலாம் என, நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வாடிக்கையாளர் பணத்தை திருடி பங்குச்சந்தையில் முதலீடு: ராஜஸ்தானில் பெண் அதிகாரி துணிகரம்
-
பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடர வேண்டும்: ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்
-
வெற்றியை கொண்டாட ரோடு ஷோ தேவையில்லை: சொல்கிறார் இந்திய அணி பயிற்சியாளர்
-
கூட்ட நெரிசலில் 11 பேர் பலி: பெங்களூரு போலீஸ் கமிஷனர் சஸ்பெண்ட்: விசாரணை கமிஷன் அமைப்பு
-
581 துணை ராணுவ கம்பெனி, ஜாமர்கள், ட்ரோன்கள்: அமர்நாத் யாத்திரை பாதுகாப்புக்கு மத்திய அரசு ஏற்பாடு
-
ராமர் தர்பார் பிரதிஷ்டை வரலாற்று சிறப்புமிக்க தருணம்: பிரதமர் பெருமிதம்
Advertisement
Advertisement