சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் மாசடையும் காஞ்சிபுரம் குளம்

காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரம், சித்தி விநாயகர் பூந்தோட்டம் பகுதியில் இருந்து, சதாவரம் பகுதிக்கு செல்லும் சாலையோரம் உள்ள குளம், அப்பகுதி நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.

குளக்கரையை ஒட்டியுள்ள சாலையில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, 'மேன்ஹோல்' வழியாக வெளியேறும் கழிவுநீர், குளத்திற்கு செல்வதால், குளத்து நீரும், அப்பகுதியில் நிலத்தடி நீரும் மாசடையும் சூழல் உள்ளது.

எனவே, பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை முழுதும் நீக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement